இ.போ.ச தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம் செய்ய தீர்மானம்

இலங்கை போக்குவரத்துசபையின் அனைத்து டிபோக்கள் இணைந்து நிறுவனத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டம் செய்ய தீர்மானித்துள்ளன என்று இலங்கை போக்குவரத்து சபை ஒன்றிணைந்த பாதுகாப்பு தொழிற்சங்க தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 7 ஆம் திகதி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் அழை்பாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.

அடிப்படை சம்பளத்தில் 2500 ரூபாவை இணைத்தல, ஒருங்கிணைந்த காலஅட்டவணை முறையை ரத்து செய்தல் உட்பட பல கோரிக்கையை முன்வைத்து இவ்வார்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

தமது பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட நேரம் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதியிடமும் போக்குவரத்து அமைச்சரிடமும் கோரியபோதிலும் இதுவரை தமது கோரிக்கைக்கு பதில் கிடைக்கவில்லை என்று அழைப்பாளர் சுட்டிக்காட்டினார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435