ஊரடங்கின் மத்தியில் கொழும்பு, கம்பஹாவில் இன்று முதல் நடக்கும் சேவைகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளபேதிலும், இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன பணிகளை வழமைக்கு கொண்டுவருதல் முன்னர் திட்டமிட்டவாறு இன்று (11) முதல் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (10) வெளியிட்ட ஊரடங்கு சட்டம் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிவித்தலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்ததப்பட்ட ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மீள அமுலாக்கப்படவுள்ளது.

குறித்த மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை நாளந்தம் இரவு 8 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435