ஊவா தமிழ் மூல பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரியர் நியமனம்

இவ்வாண்டு டிசம்பர் 31ம் திகதிக்குள் ஊவா மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரிகள் நூறு பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (24) நடைபெற்ற ஊவா மாகாணசபை அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

இன மத மொழி பேதமின்றி அனைத்து சமூகத்தினரும் கல்வியில் அபிவிருத்தியடைய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி மேம்பாட்டுக்குள்ள தடைகள் அடையாளங்காணப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்ய அவசியமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். நான் முதலமைச்சராக தெரிவாகிய பின்னர் இதுவரை மூவாயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமனம் பெற்றுள்ளனர். இதனால் மாகாண கல்வி நிலையும் மேம்பட்டுள்ளது.

அதேபோன்று, மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கும் வகையில் புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435