ஊவா மாகாண கஷ்டபிரதேச ஆசிரியர்களுக்கு ரூ. 7500 கொடுப்பனவு

கஷ்டப்பிரதேச பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கஷ்டப்பிரதேச கொடுப்பனவை 7500 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத்திற்கான 2017 வரவுசெலவை இன்று (28) முன்வைத்த முதலமைச்சர் இதனை தெரிவித்தார்.

தற்போது கஷ்டபிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கஷ்டப்பிரதேச கொடுப்பனவாக 1750 ரூபா மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை மாற்றி 7500 ரூபாவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

மேலும் மாகாண அபிவிருத்திக்காக மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதியை 25 இலட்சம் ரூபாவில் இருந்த 50 இலட்சமாக அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாகாண அமைச்சுகளுக்கான வரவு செலவு 2017 மீதான விவாதம் இன்று (28) ஆரம்பித்து எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435