எழுத்துமூலம் தீர்வு கிடைக்கும்வரை ​தொடரும் போராட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் வேலையில்லாப் பட்டதாரிகள் நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி, இன்று 13 ஆவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 1,500 க்கும் மேற்பட்ட வேலையில்லாப் பட்டதாரிகளே, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக தொடர்ச்சியான போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
தாங்கள் பட்டம்பெற்று ஐந்து வருடங்களாகியும் நியமனம் கிடைக்கவில்லை எனவும் தமக்கு உடனடியாக நிரந்தர நியமனத்தைப் பெற்றுத்தருமாறும் வேலையில்லாப் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டம்பெற்ற பட்டதாரிகளுக்கு எதற்காக போட்டிப் பரீட்சை வைக்கவேண்டும் என்றும் அவ்வாறு போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவுசெய்யும் போது பலர் புறக்கணிக்கப்படுவதாகவும் வேலையில்லாப்பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தமக்கான தீர்வானது எழுத்துமூலம் கிடைக்கப்பெறும்வரை தமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று வேலை இல்லா பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435