எழுத்து மூலமான உறுதி மொழி கிடைத்தால்….

கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்லது அரசாங்க பிரதிநிதி நேரில் வந்து எழுத்து மூலமான உறுதி மொழியை வழங்கினால் சத்தியாக்கிரக போராட்டத்தை கைவிட தாம் தயாராக இருப்பதாக மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் நேற்று (31) தெரிவித்துள்ளனர்.

சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் நாட்கள் பூர்த்தியாகிய நிலையில் கருத்து தெரிவித்த வேலையற்ற பட்டதாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால் எங்களுக்கு நேரடியாக உறுதிமொழி வழங்கப்படவில்லை. வெயில் மழை பாராமல் நாம் எமது உரிமைக்காக போராடி வருகிறோம். இந்நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சரோ அல்லது அரசாங்க பிரதிநிதியோ எழுத்து மூலமான உறுதிமொழியை நாம் சத்தியாக்கிரக போராட்டத்தை கைவிடுவோம்.

அரச நியமனம் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறினாலும் எப்போது வழங்கப்படும் என்று இது வரை உறுதியாக கூறப்படவில்லை. அதனை எழுத்து மூலமாக வழங்கினால் நாம் எமது போராட்டத்தை கைவிடுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435