ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு இலங்கையர்களுக்கு கொரோனா

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) இரண்டு இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இதுவரை 74 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்

அவர்களுள், 15 பேர் நேற்றைய தினம் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 2 இலங்கையர்களும் அடங்குவதாக வலைகுடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று காரணமாக, 119 நாடுகளில் ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 179 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவற்றுள் 25 நாடுகளில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 295 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் 80 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 ஆயிரத்து 158 பேர் பலியாகியுள்ளனர்.

இத்தாலியில் 631 பேர் அங்கு பலியாகியுள்ளதுடன், 10 ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் 8 ஆயிரத்து 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 291 பேர் பலியாகியுள்ளனர்.

தென்கொரியாவில் 60 பேர் பலியாகியுள்ளதுடன், 7 ஆயிரத்து 755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈராக்கில் 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7 பேர் பலியாகியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435