ஐக்கிய அரபு நாடுகள், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து பலர் நாட்டுக்கு

மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றிய இலங்கையர்கள் 421 பேர் இன்று (19) இலங்கையர்கள் நாடு திரும்பினர்.

ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்தே இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தினூடாக 17 இலங்கையர்களும் கட்டார் விமானசேவைக்கு சொந்தமான விமானத்தில் 394 இலங்கையர்களும் ஶ்ரீலங்கன் விமானசேவைக்கு சொந்தமான விமானத்தினூடாக 10 இலங்கையர்களும் பண்டாரநாயக்க சர்வதேவ விமானநிலையத்தை இன்று அதிகாலை வந்தடைந்துள்ளனர்.

அழைத்து வரப்பட்ட அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன் பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்கள் அங்குள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435