ஒழுங்கான தராசுக்காக கூட போராட்டம்- மலையகத்தின் தலைவிதி!

நிறுவையை ஒழுங்காக காட்டும் தராசை பயன்படுத்துமாறு கோரி ஹட்டன் போடைஸ் தோட்டத் தொழிலாளர்கள் இன்று (08) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்பட்டனர்.

புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தராசு நிறுவையை நிறுவையை ஒழுங்காக காட்டுவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அத்தொழிலாளர்கள் போடைஸ் தோட்ட காரியாலயத்தின் முன்பாக இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மேலும் தமது அடிப்படை வசதிகள் குறித்த தோட்ட நிர்வாகம் கடந்த 2 வருடங்களாக அசமந்தப் போக்கை கடைப்பிடிப்பதாகவும், இதனால் தம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ள குறித்த தோட்டத்தின் 3 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 3000 தொழிலாளர்கள் கடந்த சனிக்கிழமை தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வருவதாகவும் எமது நிருபர் தெரிவித்தார்.

தொழிலார்களுடைய பிரச்சினை தொடர்பாக கலந்துரையாட தொழிலாளர் தேசிய சங்க உப தலைவரும், முன்னால் அம்பகமுவ பிரதேச சபை தலைவருமான எம்.நகுலேஷ்வரன், சங்கத்தின் பொது செயலாளர் பிலிப் மற்றும் இலங்கை தொழிலாளர் சங்கத்தின் உப தலைவரும், முன்னால் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினருமான கு.ராஜேந்திரன் ஆகியோர் முயன்று வருவதாகவும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435