ஓகஸ்ட் முதல் பஸ் கட்டணம் 6 வீதத்தால் அதிகரிப்பு

பயணிகள் பஸ் கட்டணத்தை 6 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை நேற்று (12) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்வதிகரிப்பானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி முதல் அமுலாகும் வகையில் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வதிகருப்புக்கமைய இதுவரை 8 ரூபாவாக இருந்த பஸ் கட்டணம் ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் 9 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது. ஏனைய பஸ் கட்டண விபரங்களை பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிடப்படவிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வருடாந்த கட்டண திருத்தத்திற்கு அமைவாக நிபுணர் குழுவினரால் அதிகரிப்பு வீதம் தயாரிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.

3.2 வீதமாக பண்கட்டணத்தை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு முன்வைத்த யோசனையை பஸ் சங்கங்கள் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435