ஓய்வுபெற்ற ரயில் இயந்திர சாரதிகளை சேவைக்கு வருமாறு அழைப்பு

ஓய்வு பெற்ற ரயில் இயந்திர சாரதிகளை நாளை (09) காலை 6.00 மணிக்கு சேவைக்கு சமூகமளிக்குமாறு தொடரூந்து திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

சம்பளப் பிரச்சினையை முன்னிறுத்தி ரயில் நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் இயந்திர சாரதிகள் ஆகியோர் இன்று பிற்பகல் 3.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் பல ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டது.

அத்துடன், பல சேவைகள் தாமதமடைந்தன.
இதனால், பயணிகள் பெரும் அசௌகரியமடைந்தனர். அத்துடன், கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் அமைதியின்மையினால் பதற்றநிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், ஓய்வு பெற்ற ரயில் இயந்திர சாரதிகளை சேவைக்கு சமூகமளிக்க தொடரூந்து திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435