கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் முதற்கட்டமாக 102 பேர் ஓய்வு?

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் வழங்கப்பட்டுள்ள விருப்பத்தின் பேரில் ஓய்வுபெறும் திட்டத்தின் முதற்கட்டமாக 102 பேர் ஓய்வுபெற விண்ணப்பத்துள்ளனர்.

இவ்வாறு ஓய்வு பெற விண்ணப்பத்துள்ள 102 பேரில் 7 பேர் நட்டஈடு பெறுவதற்கான தகுதியை பெறவில்லை.

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் தற்போது 740 பேர் பணியாற்றுகின்றனர். இரண்டாம் கட்டமாக சுயவிருப்பில் ஓய்வு பெற விரும்புவோர் விண்ணப்பிப்பதற்கான அனுமதி வழங்குமாறு கூட்டுத்தான பணிப்பாளர் பி. வீரதுங்க அரச தொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆர். சேமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அனுமதி கிடைத்த பின்னர் தேவையான நட்டஈடு வழங்குவதற்கான நிதி தொடர்பான விபரங்களை அறிவிப்பதாகவும் அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெறுவதற்கான பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் 2016.07.04 திகதியிட்டு அனுப்பப்பட்ட குறித்த அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435