இலங்கையில் தொழிற்படை பற்றாக்குறை

இலங்கையின் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கையில் சுமார் 2 இலட்சம் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதாகவும் அவர்களில் தொழில் விஸா இல்லாமல் பணியாற்றுபவர்களும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், வெளிநாட்டு பணியாளர்களின் வருகை குறித்து ஆராய குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்றும் ஆலோசனை முன்வைத்துள்ளார்.

வெளிநாட்டு பணியாளர்களில், இந்திய, பங்களாதேஷ; மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர்.
முதலீட்டு சபை ஊடாக வெளிநாட்டுவர்களுக்கு அதிகமான தொழில் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டுச் சபை கடந்த ஆண்டு 8 ஆயிரம் தொழில் விஸாவுக்கான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாகவும், அவற்றுள் 5 ஆயிரத்து 786 விஸாவுக்கு முதலீட்டுச் சபை அனுமதி வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சுற்றுலா விஸாவில் வந்த சிலர் இங்கு பணியாற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் – சண்டே டைம்ஸ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435