கண்டியில் ஆயிரம் பேருக்கு தொழில்வழங்கும் நிகழ்வு

ஆயிரம் பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் நிகழ்வு கடந்த 10ம் திகதி கண்டி, சில்வெஸ்ரல் கல்லூரியில் நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 10 இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கையில் உள்ள பிரசித்திபெற்ற தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கு பற்றி இளைஞர் யுவதிகளை நேரடியாக நேர்முகம் செய்து அவர்களின் தகுதிக்கேற்ப தொழில்களை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மலிக் சமரவிக்ரம, பாராளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன, உள்ளிட்டோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.

 

நன்றி- news.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435