கத்தாரில் பொலிஸார் போன்று நடித்து மக்களிடம் பணம் பறித்த கும்பல்

கத்தாரில் பொலிஸார் போன்று நடித்து மக்களிடம் பணம் பறித்த 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

கத்தாரின் வடக்கு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் போல நடித்து மக்களைப் பயமுறுத்தி பணம் பறித்த 4 ஆசிய நாட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அல் நஜ்மா மற்றும் பழைய விமான நிலையம் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அரபிகள் போன்று ஆடையணிந்து (தோப்பு) தங்களை பொலிஸார் போன்று காண்பித்து பணம் பறிக்க முணைந்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது  செய்யப்பட்டவர்கள் உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாக பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம் : கத்தார் தமிழ்

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435