கல்விசாரா ஊழியர் பிரச்சினைக்கான முன்மொழிவு ஒரு மாதத்திற்குள்…

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முன்மொழிவை ஒரு மாத காலத்திற்கு தயாரித்து வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊதியம் மற்றும் ஊழியர்கள் தொகை மதிப்புச்சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த முன்மொழிவை நிதியமைச்சிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதி காரியாலயத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாபதி இவ்வாறு கூறியுள்ளார்.

சுமார் ஒரு மாதகாலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

சம்பள முரண்பாட்டுப் பிரச்சினையைத் தீர்த்து பல்கலைக்கழக நடவடிக்கைகள் வழமைக்கு விரைவில் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435