கல்வியயற் கல்லூரியில் பயிற்சி மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை

கல்வியியற் கல்லூரிகளில் இணைத்துக்கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்வியியற் கல்லுரி ஆணையாளர் கே.எம். எச். பண்டார இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், இம்முறை 4775 மாணவர்களை கல்வியியற் கல்லுரியில் இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

ஆண்டுதோறும் நாட்டில் உள்ள பாடசாலைகளில் 8000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவித்த அவர், இம்முறை கல்வியயற் கல்லூரிகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும்போது தொழில்நுட்ப விடயம் கற்கும் மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435