காலி கனிஷ்ட தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படாமையினால் காலி பிரதான தபால் அலுவலக கனிஷ்ட பிரிவு ஊழியர்கள் இன்று (15) வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (14) மாலை 5.00 மணி தொடக்கம் இரவு சேவைக்கு சமூகமளித்த கனிஷ்ட பிரிவு ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை பெற்று கடமைகளை தவிர்த்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழமையாக காலி பிரதான காரியாலய ஊழியர்கள் அனைவருக்கும் 10ம் திகதி மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவதாகவும் இம்முறை அதிகாரிகளுக்கு மாத்திரம் உரிய தினத்தில் கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும் தமக்கு இதுவரையில் வழங்கப்படவில்லை என்றும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கனிஷ்ட ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435