கிராம சேவகர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

தற்போது நாட்டின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நிலவும் கிராம சேவகர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று பிரதி உள்விவகார அமைச்சர் நிமல் லன்சா நேற்று (11) பாராளுமன்றில் தெரிவித்தார்.

நிலவும் கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த தனிநபர் பிரேரணை தொடர்பில் விவாதத்திற்கு நேற்ற (11) எடுத்துக்கொண்ட போதே பிரதியமைச்சர் இதனை தெரிவித்தார்.

பரீட்சை திணைக்களத்தினூடாக நடத்தப்பட்ட கிராம சேவகர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை பெறுபேறுகள் தற்போது அமைச்சுக்கு கிடைத்துள்ளன. விரைவில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படும். மற்றும் பதில் கிராம சேவையாளர்களுக்கான கொடுப்பனவை முடிந்தளவு நியாயமானதாக வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

 

dgi

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435