கிழக்கில் சித்தியடைந்த அனைவருக்கு நியமனம் கிடைக்குமா?

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் 2868 பேர் சித்தியடைந்துள்ளனர். எனினும் மாகாணத்தில் 1440 வெற்றிடங்கள் உள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் சித்தியடைந்த அனைவருக்கும் நியமனங்கள் கிடைக்குமா என்ற கேள்வி எழும்பியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பரீட்சை எழுதிய 3009 பேரில் 1296 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் பரீட்சை எழுதிய 1521 பேரில் 576 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரீட்சை எழுதிய 2350 பேரில் 576 பேருமாக 2868 பேர் சித்தியடைந்துள்ளன.

சித்தியடைந்துள்ள அனைவரும் இரண்டு பாடங்களுக்கும் 40 இற்கும் அதிகமாக புள்ளிகளை பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கிழக்கு ஆளுநர் அண்மையில் கருத்து வௌியிடுகையில் 1500 ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான தரவுகள் சேகரிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435