கிழக்கில் திடீர் இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்

கிழக்கு கிழக்கு மாகாணத்தில் ஆளுநரினால் வழங்கப்பட்ட ஆசிரியர் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆசிரியர்கள், தாம் ஏற்கனவே சேவையாற்றிய பாடசாலைகளுக்கு மீள சேவைக்குத் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆசிரியர்கள் தாங்கள் முன்னர் சேவையாற்றிய பாடசாலையில் மீள சேவைக்கு சமுகமளிக்காவிட்டால், அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் ஐ.கே.பி.முத்துபண்டா தெரிவித்துள்ளார்.

சேவைக்கு மீள திரும்பாத ஆசிரியர்கள் தொடர்பில் இந்த வாரத்திற்குள் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வேதனமற்ற விடுமுறை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றியிருந்ததை அடுத்து, ஏற்பட்டிருந்த பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பணிப்பின்பேரில் தமிழ் பாடசாலைகளில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட முஸ்லிம் ஆசிரியர்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் உத்தரவின்பேரில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், இடமாற்றம் வழங்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.என்.கே.மன்சூரினால், கடந்த 24 ஆம் திகதி கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள், முன்னதாக பணியாற்றிய பாடசாலைகளில் கட்டாயமாக பணிக்கு சமுகமளிக்க வேண்டம் என அந்தக் கடிதம் மூலம் பணிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தனது அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் பணியாற்றிய முஸ்லிம் ஆசிரியர்களுக்கு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்துள்ளார் என ஜனாதிபதியிடம் முறையிடப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனினால், ஜனாதிபதியிடம் இந்த முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் ஆராயந்தபோது, கிழக்கு மாகாணத்தின் தமிழ் பாடசாலைகளில் சேவையாற்றிய 167 முஸ்லிம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்தள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435