கிழக்கு ஆசிரியர் நியமனம்- மேன்முறையீடு செய்ய வாய்ப்பு

கிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அநீதிகள் மற்றும் முறைகேடுகள் இழைக்கப்பட்டிருந்தால் தமது முறைப்பாடுகளை மேன்முறையீட்டு சபையிடம் ஒப்படைக்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனத்தின் போது பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நாளுக்கு நாள் ஆளுனரிடம் தமது கவலைகளையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்வினை வழங்கும் நோக்கில் உடனடியாக மேன்முறையீட்டு சபையொன்றினை ஆரம்பித்துள்ளதாகவும் மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் பட்டதாரி நியமனத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது மேன்முறையீடுகளை தனித்தனியாக எழுதி கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளரிடம் ஒப்படைக்குமாறும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இம்முறையீடு தொடர்பாக தேர்தல் முடிவடைந்தவுடன் சிறந்த தீர்வினை வழங்கவுள்ளதாகவும். தங்களது மேன்முறையீடுகளை ‘செயலாளர் கிழக்கு ஆளுனர் அலுவலகம். திருகோணமலை’ எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுனர்
பாதிக்கப்ட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு கிழக்கு ஆளுனரிடன் ஊடகப்பிரிவு
தொலைபேசி இலக்கம் – 0777004772

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435