கிழக்கு டிப்ளோமாதாரிகளுக்கு சொந்த மாகாணத்திலேயே நியமனம்

மாகாணத்துக்கு வெளியே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு சொந்த மாகாணத்திலேயே நியமனம் வழங்க பிரதமர் ரணில் விக்கரமசிங்க சம்மதித்துள்ளார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று முன்தினம் பிரதமருக்குக்கும் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீருக்கும் இடையில் இடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இவ்விடயத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கல்வியியற் கல்லூரிகளில் கற்கையை பூர்த்தி செய்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 407 டிப்ளோமாதாரிகளுக்கு அண்மையில் நியமனங்கள் வழங்கப்பட்டன. அவர்களில் 192 பேர் கிழக்கு மாகாணத்திலும் மிகுதி 215 பேர் வெளிமாகாணங்களிலும் நியமனங்களை பெற்றுள்ளனர். இதனால் வெளிமாகாணங்களில் நியமனங்களை பெற்ற ஆசிரியர்கள் சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் முதலமைச்சர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடினார். பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் பொருட்டு குறித்த ஆசிரியர்களுக்கு சொந்த மாகாணத்திலேயே நியமனங்கள் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாட நெறிகளுக்கு 1134 வெற்றிடங்கள் காணப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435