கிழக்கு பட்டதாரிகள் பிரச்சினையை தீர்க்க எந்த எல்லைக்கும் செல்லத் தயார்

தனது பதவிக்காலம் நிறைவடைவதற்குள் கிழக்கு மாகாண பட்டதாரிகள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல தயாராக உள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னாவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணையை ஆதரித்து நேற்றுமுன்தினம் (21) உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தற்போது பட்டதாரிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நியமனங்களுக்காக காத்துக்கொண்டுள்ளனர். அவர்களுள் பலர் தமது உரிய வயதைக்கடந்தும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கு பட்டதாரிகளை இணைத்து கொள்ளும் வயதெல்லையை இம்முறை ஆசிரியர் நியமனத்தின் போது பட்டதாரிகளின் கோரிக்கைக்கு அமைய 40ஆக மாற்றியுள்ளோம். வயதெல்லையை 45ஆக மாற்றுவதற்கான முழுமையான முயற்சிகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

பட்டதாரிகளின் வேதனைகளை நன்கு அறிந்தவன் என்ற வகையில் எனது அதிகாரத்திற்குட்பட்ட வகையில் அவர்களுக்கு தம்மால் இயன்றவை அனைத்தையும் செய்வதற்கு தாமும் அமைச்சரவை வாரியமும் முழு முயற்சிகளை எடுத்துவருகிறோம்.

கிழக்கு மாகாண பட்டதாரிகளின் நியமனங்கள் மற்றும் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் புதிய ஆளணிகளை உருவாக்குவதற்குமான முழுமையாக அதிகாரங்கள் தம்மிடம் வழங்கப்படுமாயின் அதற்குரிய செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க தாம் காத்திருக்கிறேன்.

கிழக்கு மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களத்திற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ உத்தியோகத்தர்களையும் இணைத்துக் கொள்வது தொடர்பில் மாகாண கணக்காய்வு திணைக்களத்தின் பிரதம உள்ளக கணக்காய்வளரிடம் விபரங்கள் கோரப்பட்டுள்ளது.

குறித்த விபரங்கள் கிடைக்கப்பெற்ற உடனேயே அவற்றை நிரப்புவதற்கான முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்னார்.

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவே நியமனங்கள் தொடர்பான அநேக தீர்மானங்களை எடுப்பதுடன் அது தொடர்பான பல அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435