தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் எப்போது?

கிழக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுவோர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி நேற்று (28) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 445தொண்டனர் ஆசிரியர்கள் நேற்று மாவட்ட கல்வியமைச்சின் முன்பாக இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

கல்வியமைச்சின் செயலாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை சந்தித்து ஓரிரு வாரங்களில் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வொன்றை வழங்குவதாக உறுதியளித்ததையடுத்து தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுவோர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு பல வருடங்களாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட போதிலும் இன்னும் தீர்வு வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435