குவைத்தில் ஊரடங்குச் சட்டம்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இன்று (22) குவைத்தில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் வீடுகளில் இருப்பதனூடாக கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இவ்வூரடங்குச் சட்டமானது இன்று அந்நாட்டு நேரப்படி அதிகாலை 5.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நாளை அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்படுகிறது.

அத்தியவசிய சேவைகளில் உள்ளவர்கள் ஊரடங்குச் சட்ட நேரத்தில் நடமாடுவதற்கு விசேட அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான விடுமுறை 26 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435