குவைத் முதல்நிலை பணியாளர்களுக்கு இலவச விமான டிக்கட்

குவைத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் முதல் நிலையில் இருந்து பணியாற்றி வருபவர்களுக்கு 50,000 இலவச விமான டிக்கெட்டுகள் வழங்குவதாக குவைத் Al Jazeera Airways விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

குவைத்தில் உள்ள Al Jazeera Airways விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முதல் நிலையில் இருந்து பணியாற்றி வரும் 50,000 பேருக்கு இரு வழிப் பயண விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது..

குவைத் அமைச்சரவை மூலமாக பரிந்துரை செய்து தேர்ந்க்கப்படுவார்கள் மட்டுமே இதில் பயனடைய முடியும் என்றும், குவைத்தில் வணிக ரீதியிலான விமான சேவை தொடங்கிய உடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

2021ம் வரை இந்த இரு வழி விமான பயண சீட்டினை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி- குவைத் தமிழர்கள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435