கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் மருதனார் மடத்தில்

இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு எதிர்வரும் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை (01) சுன்னாகம் மருதனார் மடத்தில் நடைபெறவுள்ளது. குறித்த தினம் பிற்பகல் 4 மணிக்கு மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் மாபெரும் பொதுக்­கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு நல்லூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் பெ.கனகசபாபதி தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சேனாதிராஜா மற்றும் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்.

இப்பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக குறித்த தினம் பிற்பகல் 3 மணிக்கு இணுவில் கோவில் முகப்பிலிருந்து மே தினப் பேரணி மருதனார் மடம் நோக்கி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435