கூட்டு ஒப்பந்தத்திற்கெதிரான முறையீட்டுக்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்

கூட்டு ஒப்பந்ததிற்கு எதிராக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் நான் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள எழுத்தானை வழக்கானது தனித்து, எனதோ எமது சங்கத்தினதோ முயற்சி என்று மட்டும் மட்டும் பார்க்கவில்லை.

மாறாக கூட்டு ஒப்பந்தத்திற்கு தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிபடுத்த வழக்கிட வேண்டும் என்று வௌிப்படையாக கூறிய மற்றும் வழக்கு தாக்கல் செய்திட வேண்டும் என்று அபிப்பிராயம் கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் மீது அக்கறை கொண்டவர்கள் சார்பாகவே நாம் வழக்கிட்டுள்ளோம் என்று நாம் கருதுகிறோம் என்று மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இளையதம்பி தம்மையா வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வழக்கின் தீர்ப்பு தொழிலாளருக்கு சாதகமாக அமைந்தாலும் அமையாவிட்டாலும் தொழிலாளர் நலனை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு செயற்பாடுகள் அவசியமாகும். தீர்ப்பு சாதகமாக வருமிடத்து புதிய கூட்டு ஒப்பந்தத்தை செய்ய கம்பனிகளையும் தொழிற்சங்கங்களையும் நீதிமன்றம் நிர்ப்பந்திக்கும். இச்சந்தர்ப்பத்தில் தொழிற்சங்கஙகளுக்கு அழுத்தம் கொடுக்க தொழிலாளர்களும் தொழிலாளர் சார்பு தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், தனிநபர்கள் முன்வரவேண்டும். அதேபோல் தீர்ப்பு சாதகமாக அமையாதவிடத்து தொழிலாளர் உரிமைகள் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மிகுந்த தயாரிப்பு அவசியமாகிறது.

பாக்கிச் சம்பளம் மறுப்பு, சம்பள உயர்வு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இருத்தமை, காலவரையின்றி பேணுவதற்கான ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளமை, நுணுக்கமான முறையில் முன்னர் பெற்ற 620 ரூபா நாட்சம்பளத்தை விட குறைவான சம்பளத்தை பெறுவதற்கான ஏற்பாடுகளை சேர்த்துள்ளமை, அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் வௌியாள் உற்பத்தி முறை சேர்த்துள்ளமை, போன்ற விடயங்கள் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை மறுக்கும் அதேவேளை, அவர்களை நவீன அடிமைகளாக ஆக்கும் முயற்சியின் விளைவாகும்.

இதுவரை அனுபவித்த உரிமைகளையும் இழந்த தொழிலாளர்கள் நவீன அத்தக்கூலிகளாக ஆக்கும் முயற்சிகள் இன்றைய ஆளும் வர்க்கங்களினாலும் அதற்கு துணைபோகும் தொழிற்சங்கங்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்தின் ஒரு ஆரம்ப நடவடிக்கையே வழக்கு நடவடிக்கையாகும். எனவே வழங்கு நடவடிக்கைக்கும் ஒத்துழைப்பு வழங்கும் அதேநேரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அப்பால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள், அவர்களின் இருப்பை பாதுகாக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மீது அக்கறை கொண்டவர்கள் இணைந்து செயற்பட முன்வரவேண்டும்.

வழக்கு நடவடிக்கைகளுக்கு தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்க அரசியற் கட்சி ​பேதமின்றி எமக்கு ஆதரவை வழங்க வேண்டும். தோட்டத் தொழிலாளர் உரிமையில் அக்கறைக் கொண்ட மலையகத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புக்கள், தனிநபர்கள், தங்களால் வழங்கக்கூடிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு செயற்படுவதற்கு இனியும் தாமதிப்பது தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான அரசாங்கம், கம்பனிகளிடத்தில் தொழிலாளர் உரிமைகளை விட்டுவிடுவதாக அமைந்து விடும். எனவே கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக வழக்கு நடவடிக்கைகளுக்கு உங்களால் வழங்கக்கூடிய ஒத்துழைப்புக்களை வழங்குமாறு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மத்தியக்குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு – 071 430 2909, 071 627 5459

சட்டத்தரணி இளையதம்பி தம்மையா
பொதுச் செயலாளர்
மக்கள் தொழிலாளர் சங்கம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435