கூட்டு ஒப்பந்தத்தில் புதிய திருப்பம்: வெளிவந்தது புதிய தகவல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படை சம்பளத்தை தவிர்த்து, ஏனைய சில விடயங்களில் தொழிற்சங்கங்கள் நெகிழ்வுத் தன்மையை வெளிப்படுத்தி இருப்பதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொழிற்சங்கங்கள் இருக்கின்றன.

ஆனால் இதனைத் தவிர்த்து மூன்று முக்கியமான விடயங்களில் தொழிற்சங்கங்கள் நெகிழ்வுத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது கடந்த நான்கு மாதங்களாக இடம்பெறும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக தொழிற்சங்களிடம் இருந்து கிடைத்துள்ள சாதகமான மாற்றம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, வரவுக்கான கொடுப்பனவும், வினைத்திறன் கொடுப்பனவு மற்றும் விலை பங்கீட்டு கொடுப்பனவு ஆகிய விடயங்களில் முதலாளிமார் சம்மேளனம் சில யோசனைகளை முன்வைத்திருப்பதாகவும், அந்த விடயத்தில் சிறிய இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் தொழிற்சங்கங்கள் இந்த விடயத்தில் இன்னும் இறுதி தீர்மானத்துக்கு வரவில்லை என்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிமூலம்: சூரியன் செய்திகள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435