கூட்டு ஒப்பந்தம் குறித்து ஆராய விசேட குழு அமைத்தது இ.தொ.கா

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள நிர்ணயம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் குறித்து ஆராய்வதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விசேட குழு ஒன்றை நியமித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் காலாவதியாகின்றது.

இந்த நிலையில், புதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ளன.

இதற்கமைய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விசேட குழு ஒன்றை நியமித்துள்ளதாக அதன் உபத்தலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான கனபதி கணகராஜ் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானால் இந்த குழு நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435