கொழுந்து பறிக்கச் சென்ற பெண் தொழிலாளி சடலமாக மீட்பு

நாவலபிட்டியில் கொழுந்து பறிக்கச்சென்ற பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாவலபிட்டி – பலங்தொட்ட பகுதியை சேர்ந்த 84 வயதான நான்கு பிள்ளைகளின் தாயின் சடலமே மகாவலி கங்கையில் மிதந்தவாறு இன்று மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்துள்ள பெண் சில தினங்களுக்கு முன்னர் தமது தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிக்க சென்றிருந்த வேளை காணாமல் போயிருந்ததார் என அவரின் பிள்ளைகள் நாவலபிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீரை பெற்றுக்கொள்வதற்காக மகாவலி கங்கைக்கு அருகில் சென்றிருந்த வேளை அவர் நீரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிமூலம்: சூரியன் செய்திகள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435