கொழும்பில் போராடும் வேலையற்ற பட்டதாரிகள்

வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இன்று (23) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பதவிக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு ஒரு வருடம் நிறைவுற்றுள்ள நிலையில் இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை என்று கூறி இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த 2017ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கோரப்பட்டிருந்து. அவ்விண்ணப்பங்களுக்கான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு ஒரு வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் இதுவரையில் தமக்கு நியமனங்கள் எதுவும் வழங்கப்படவி்ல்லை என வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435