கோட்டை ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை

கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்களில் ஒரு தொகுதியினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பபட்டது,

குறித்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கர்ப்பிணியான குறித்த பெண்ணுக்கு கொவிட் 19 தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக காசல் வீதி மகளிர் மருத்துவமனை உறுதி செய்துள்ளது.

28 வயதான குறித்த பெண் தற்போது முல்லேரியா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

குறித்த ஆடை உற்பத்தி நிலையத்தில் 27 ஊழியர்களுக்கு பி. சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோட்டை நகரசபையின் சிரேஷ்ட சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் மனோஜ் ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435