சட்டவிரோதமாக ஆஸி. செல்ல முயன்ற 10 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 10 பேரை வென்னப்புவ பொலிஸார் இன்று (20) கைது செய்துள்ளனர்.

கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்லும் நோக்கில் வென்னப்புவ நைனாமடம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைவாக தங்கியிருந்த பல்லம பிரதேசத்தைச் சேர்ந்த 10 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணவன், மனைவி மற்றும் அவர்களின் குழந்தைகளும் இப்பத்து பேரில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் மாரவில நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435