சட்டவிரோத இடமாற்றத்தை தடுத்தி நிறுத்திய தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் காலத்தில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட இடமாற்றங்களை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டத்தக்கது என்று இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அச்சங்கத்தின் செயலாளர் ஹரித்த அளுத்கே இவ்வாறு பாராட்டியுள்ளார்.

சுகாதார அமைச்சு தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் வைத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றங்களை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது. குறித்த அதிகாரிகள் கிழக்கு மாகாணத்திற்கு மாற்றல் செய்யப்படவிருந்தனர். உடனடியாக இச்சட்டவிரோத இடமாற்றத்தில் தலையிட்ட தேர்தல் ஆணைக்குழு அதனை தடுத்தி நிறுத்தியமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று சங்கச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435