சம்பள உயர்வின்றேல் கறுப்பு மேதினம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவால் அதிகரிக்கப்படாவிடின் இம்முறை கறுப்பு மேதினமாக அனுஷ்டிக்கப்படும் என்று தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பத்தனை, திம்புள்ள சந்தியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முப்பதுக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களே இவ்வாறு கூறியுள்ளனர்.

சுமார் அரை மணி நேரம் நடத்தப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோட்டத் தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், கால காலமாக மேடையேறி பலர் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். இம்முறை அவ்வாறான வாக்குறுதிகளுக்கு ஏமாற நாம் தயாரில்லை. இம்முறை தொழிலாளர் தினத்தில் மேடையேறும் அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் 1000 ரூபா சம்பள உயர்வு குறித்து உறுதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

வேலைத்தளம்/தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435