சம்பள உயர்வின்றேல் தொடர் வேலைநிறுத்தம்

எதிர்வரும் இரண்டு வாரக் காலப்பகுதிக்குள், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க, தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவிக்காவிட்டால், தொடர் வேலைநிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுப்பதற்கு, தோட்டத் தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

கடந்த வாரங்களில், இப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்ற நிலையில், இது தொடர்பில் கண்டறிவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு, இதுவரையில் தீர்வு எட்டப்படாத நிலையிலேயே, தொழிலாளர்கள் மேற்கண்ட காலக்கெடுவினை விடுத்துள்ளனர்.

வேலைத்தளம்- தமிழ் மிரர்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435