சம்பள உயர்வு தொடர்பில மத்திய மாகாண புதிய ஆளுநரின் யோசனை

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்க முடியாவிட்டாலும், 800 ரூபாய் என்ற அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கான இயலுமை இருப்பதாக மத்திய மாகாண ஆளுநர் மத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும், பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் நவீன் திஸாநாயக்க உரிய முறையில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையக தொழிற்சங்கங்கள் பெருந்தோட்டங்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435