சம்பள நிர்ணய ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் யோசனை இன்று அமைச்சரவைக்கு

அரச துறையைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களினதும் சம்பளத்தை அதிகரித்தல் மற்றும் சம்பள நிர்ணய முறைமையில் நிலவும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வது குறித்து ஆராய சம்பள நிர்ணய ஆணைக்குழு  ஒன்றை ஸ்தாபித்தல் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்றைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ரயில்வே பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பை அடுத்து, அரசதுறை பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய, இன்று நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட உள்ள அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக, ரயில்வே துறை உட்பட அனைத்து அரசதுறை பணியாளர்களினதும் சம்பள உயர்வு குறித்த இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435