சம்பள போராட்டத்தில் வெற்றிபெற்ற தலவாக்கலை லிந்துலை நகர சபை பணியாளர்கள்

மாதாந்த சம்பளம் வழங்கப்படாதமை காரணமாக தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் பணியாளர்கள் நேற்று (24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதாந்தம் வழங்கப்படும் சம்பளம் இன்றைய தினம் (24) அன்று வழங்கப்படாதமை காரணமாக அவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் தவிசாளர் அசோக சேபால, மத்திய மாகாண உள்ளுராட்சிமன்ற ஆணையாளரின் செயற்பாடுகள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், பணியாளர்கள் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பை வெளியிட்டு வந்தமையினால், தலவாக்கலையில் உள்ள அரச வங்கியின் முகாமைத்துவ அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட நகர சபை தவிசாளர் அசோக சேபால, இந்தப் பிரச்சினை குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையடுத்து, குறித்த சம்பளத்தை (24) அன்று வழங்க வங்கி ஊடாக வழங்க இணக்கம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்;ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435