சர்வதேச விமானநிலையம் செல்வோர் கவனத்திற்கு

பயணிகள் தவிர வௌிநபர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தினுல் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதுகாப்புக் கருதி இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து இலங்கை வந்த அந்நாட்டுப் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து இன்று (28) தொடக்கம் மறு அறிவித்தல் வரை இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாபயணிகளில்வருகை வீஸா உள்ளவர்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

நேற்று (27) இரவு பண்டாரநாயக்க விமானநிலையத்தை பார்வையிட சென்ற அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435