சவுதி வாழ் இலங்கையர்கள் நாடு திரும்ப விசேட விமானம்

ரியாத்துக்கான இலங்கை தூதரகம் மற்றும் ஜெத்தா கன்சியுலர் ஜெனறர் அலுவலகம் என்பன ஶ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள விசேட விமானம் எதிர்வரும் 27ம் திகதி இலங்கை வர ஏற்பாடாகியுள்ளது.

கொவிட் 19 பரவல் காரணமாக தாய்நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்காக, விசேட தனிமைப்படுத்தல் வசதிகளுடன் இவ்விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்யப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்ப விரும்பு இலங்கையர்கள், கீழே தரப்பட்டுள்ள ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு தமக்கான டிக்கட்டுக்களை ஒதுக்க முடியும். ஒரு நபருக்கான கட்டணம் சவுதி அரேபிய ரியால் 4,450 ஆகும் என தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய,
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ரியாத் அலுவலகம்- 0114 788 935 / 0114 772 228 – ext – 291, 292, 293 – மின்னஞ்சல் – [email protected]
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தமாம் அலுவலகம் – 013 882 5161 – மின்னஞ்சல் – [email protected]
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஜெத்தா அலுவலகம் – 012 263 2999 – மின்னஞ்சல் – [email protected]

குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆசனங்களே உள்ளமையினால் முதலில் நாடுவோருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

மோசடிகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும் வேறெந்த முகவரிடமும் பணத்தை வழங்க வேண்டாம் என்றும் தூதரகம் இலங்கையர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435