சவூதியில் இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு காலம்

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் அங்கிருந்து இலங்கைக்கு திரும்புவதற்கான பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேளைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 3 மாதகாலம் பொதுமன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேளைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குடிவரவு சட்டங்களை மீறி சட்டவிரோதமாக சவூதி அரேபியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை எந்தவித தண்டனைகளும் இன்றி, அங்கிருந்து வெளியேறுவதற்கு இந்த பொதுமன்னிப்பு காலத்தின் ஊடாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுமன்னிப்பு காலத்தின் பின்னர் சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என சவுதி அரேபிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435