சித்திரவதைக்குள்ளாகிய இலங்கைப் பெண் குவைத்தில் மரணம்

குவைத்தில் இலங்கை பணிப்பெண் ஒருவர், சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார்.

கல்ப் நியுஸ் இதனை தெரிவித்துள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் குவைத்தை சேர்ந்த தம்பதியினரை காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

எரிகாயங்கள் உட்பட பல காயங்களுடன் அமரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இலங்கை பணிப்பெண் உயிரிழந்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த பணிப்பெண்ணிற்கு தொழில்வாய்ப்பை வழங்கியவர்களே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர் அவர்களை விசாரணை செய்துவருகின்றோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட இலங்கை பணிப்பெண் உயிரிழந்தார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முழுமையான அறிக்கையை பெறுவதற்காகவும் என்ன நடந்தது என்பதை உறுதி செய்வதற்காகவும் உயிரிழந்த பணிப்பெண்ணின் உடலை தடயவியல் பிரிவிற்கு அனுப்பியுள்ளோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435