சிரேஷ்ட தொழிற்சங்கவாதி காலமானார்!

மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்கவாதியான சிங். சின்னையா இன்று (25) தனது 73வது வயதில் காலமானார்.

இந்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிருத்தி அமைச்சர் பழனி. திகாம்பரத்தின் மாமனாரான சிங். சின்னையா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவராவார்.

சௌமியமூர்த்தி தொண்டமானின் காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில், தொழில் அதிகாரிகயாக நீண்டகாலம் பணியாற்றிய சிங். சினையா, பின்னர் மத்திய மாகாணசபை உறுப்பினராக இருமுறை தெரிவாகியுள்ளார். பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகி, தொழிலாளர் தேசிய சங்க உபதலைவராக பணியாற்றி வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இன்று (25) இலங்கைக்கு கொண்டுவரப்படும் அவருடைய பூதவுடன் ஹட்டனில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435