சிறந்த புள்ளிகளை பெற்ற அதிபர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி!

அண்மையில் நடத்தப்பட்ட அதிபர் சேவை தரம் 111 போட்டிப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற அதிர்பகளுக்கு வெளிநாட்டில் பயிற்சிகள் வழங்கப்படும் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

கல்வியமைச்சில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அதிபர் இல்லாத பாடசாலைகளில் பதில் அதிபர்களாக கடமையாற்றியவர்களில் சிலர் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்தனர். பதில் அதிபர்களாக கடமையாற்றியவர்களை பிரதியதிபர்களாக தரமுயர்த்தவும் மூன்று வருடங்கள் பதில் அதிபர்களாக கடமையாற்றியிருப்பின் அவர்களுக்கு மீண்டும் அதிபர் பரீட்சை நடத்துமாறும் அமைச்சரவை சிபாரிசு செய்துள்ளது.

அண்மையில் நடத்தப்பட்ட அதிபர் போட்டிப்பரீட்சையில் தோற்றி சுமார் 3901 பேர் சித்தி பெற்று அதிபர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435