சுகாதாரத் தொண்டர்கள் நியமனம் கோரி போராட்டம்

சுமார் 14 வருடங்களுக்கு மேலாக சுகாதார தொண்டர்களாக பணியாற்றிய தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை முன்பாக வவுனியாக சுகாதாரத் தொண்டர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

சுகாதார தொண்டர்களாக புதிதாக நியமனம் பெற்றவர்கள் தமது கடமைகளை பொறுப்பெடுக்க பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிதாக சுகாதார தொண்டர்களாக நியமனம் பெற்றவர்களின் சேவையும் தற்காலிகமாக அரசு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை சுட்டிக்காட்டியிருந்தது.

மேலும் யாழ் மாவட்ட சுகாதார தொண்டர்களும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நியமனம் வழங்குவதற்கான கடிதங்கள் நியமனதாரர்களுக்கு அனுப்பப்பட்ட போதிலும் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அனுப்பப்பட்ட சுற்றுநிரூபத்திற்கமைய குறித்த நியமனத்திற்கு கையெழுத்திட அனுமதிக்க முடியாது என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விளக்கப்படுதியதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435