சுகாதார அமைச்சருக்கு எதிராக முல்லை வைத்தியர்கள்

சுகாதார அமைச்சர் ராஜித சேனராத்தினவிற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ​வைத்தியர்கள் நேற்று (13) கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டமானது பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பித்து 30 நிமிடங்கள் வரை முன்னெடுக்கப்பட்டது.

கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் ஒன்று கூடி நேற்று (13) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

தரமற்ற நீரிழிவு, புற்றுநோய் மருந்துகளை நிறுத்துக, ஔடத அதிகாரத்தை மருந்து மாபியாக்களிடம் ஒப்படைக்காதே, இலங்கை மருத்துவச்சங்கத்திற்குள் அரசியல் தலையீட்டை மேற்கொள்ளாதே, ராஜித்த வேண்டாம் போன்ற வசனங்களை எழுதிய பதாதைகளை தாங்கி இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ராஜித்த சேனாரத்னவின் குடியியல் உரிமையை இல்லாதொழிக்கவேண்டியது ஏன் என்றும் துண்டுபிரசுரம் வீதியில் செல்பவர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சுகாதார அமைச்சருக்கு எதிராக நேற்று பதுளையிலும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் குடியுரிமையை பறிக்குமாறு வலியுறுத்தி பதுளை மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால், பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக இப்போராட்டம் நடத்தப்பட்டது.
” சுகாதார அமைச்சர் ராஜிதவால், நாட்டின் சுகாதார சேவைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன், பிரச்சினைகளும் தலைதூக்கியுள்ளன.
எனவே, அவரின் குடியுரிமை பறிக்கப்படவேண்டும்.” என போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் கோஷமெழுப்பினர்

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435