சுகாதார பணியாளர்களுக்கு அஞ்சல் வாக்களிக்க வாய்ப்பு: விண்ணப்ப இறுதித் திகதி இதோ

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கோரிக்கைபடி அனைத்து சுகாதார பணியாளர்களும் அஞ்சல் மூலம் வாக்களிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இணக்கம் வெளியிட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 10 ஆம் திகதி மதியம் 12 மணி வரை அதற்கான விண்ணப்பங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலங்களில் கையளிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விண்ணப்பப்பத்திரங்களை, தங்களின் மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் எதிர்வரும  கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது, ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும், சுகாதார உத்தியோகத்தர் ஒருவரை நியமிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435